இளம் பெண்களை சாட்டையால் அடிக்கும் வினோத திருவிழா.

by Editor / 25-10-2023 10:30:20pm
இளம் பெண்களை சாட்டையால் அடிக்கும் வினோத திருவிழா.

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அச்சப்பன் கோவிலில் ஆண்டு தோறும் விஜயதசமி தினத்தன்று நடைபெறும் விழாவில் அன்று பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத வழிபாடு நடத்தப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது. இந்த ஆண்டு திருவிழா நேற்று 24 ஆம் தேதி நடைபெற்றது.இந்த சாட்டையடி விழாவில் திரளான பெண்கள் பங்கேற்றனர். 

 காட்டு கோவில் திடலில் நீண்ட வரிசையில் தலைமுடிகளை அவிழ்த்து கைகளை உயர்த்தி மண்டியிட்டபடி பெண்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த கோவில் பூசாரி பெண்களின் கைகளில் சாட்டையால் அடித்தார். ஒரு சில பெண்கள் நான்கு அல்லது ஐந்துக்கும் மேற்பட்ட சாட்டையடி வாங்கினர். பின்னர் சாட்டையடி வாங்கிய பெண்கள் கோவிலுக்கு சென்று முகத்தில் தீர்த்தம் தெளித்தும், விபூதி பிரசாதம் வாங்கி சென்றனர். 

இந்த அச்சப்பன் கோவிலில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்குவதால் காத்து கருப்பு, பில்லி, சூனியம் பேய் பிடித்தல் ஆகியகேட்ட சக்திகளிடமிருந்து  தங்களை பாதுகாத்து கொள்வதாகவும், திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் சுவாமியிடம் வேண்டி கொண்டு சாட்டையால் அடி வாங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும்,திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

 

Tags : இளம் பெண்களை சாட்டையால் அடிக்கும் வினோத திருவிழா.

Share via