போதை பொருளுடன் சினிமா நடிகர் கைது

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் சிலர் போதைப் பொருள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன், அடிப்படையில் அப்பகுதியில் வரும் வாகனங்களை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது, காரில் வந்த 2 பேரிடம் சோதனை செய்தபோது, அவர்களிடமிருந்து 5 கிராம் அளவிலான போதைப் பொருள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, அருண் மற்றும் குமாரன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இதில், அருண் என்பவர் மலையாள சினிமாவில் சில படங்களிலும், சின்னத் திரை தொடர்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :