புது மாப்பிள்ளை பலி

by Staff / 13-11-2022 05:09:18pm
 புது மாப்பிள்ளை பலி

சென்னை புளியந்தோப்பு, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முகமதுஅலி (29). இவர், ஒரு தனியார் நிறுவனத்தின் மூலமாக உணவு பொருட்களை வீடு வீடாக டெலிவரி செய்யும் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன் முகமது அலிக்கு திருமணமாகி, அஸ்மா என்ற மனைவி இருக்கிறார்.

இந்நிலையில், நேற்று மாலை மணலியில் ஒருவருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக, திருவொற்றியூர் அருகே பக்கிங்காம் கால்வாய் ஓரமாக முகமது அலி ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் சென்று கொண்டிருந்தார். இவர் மணலி சாலை சந்திப்பில் திரும்பியபோது, பின்னால் வந்த டிரெய்லர் லாரி பைக்கின்மீது வேகமாக மோதியது. இதில் பைக்கிலிருந்து முகமது அலி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி, முகமது அலி தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் மணலி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். அங்கு முகமது அலியின் சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் விஜயகுமார் என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
 

 

Tags :

Share via