மாணவ மாணவியர் பொதுமக்கள் போராட்டம்

by Staff / 15-11-2022 01:33:36pm
மாணவ மாணவியர் பொதுமக்கள் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா சின்னுலுப்பை அருகே அம்மாபட்டி பகுதியில் ரேஷன் கடை மருத்துவமனை செல்வதற்கு சாலை வசதி செய்து தராத திமுக அரசை கண்டித்து மாணவ மாணவியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் மழை நீரில் பாம்பு அதிகமாக வருவதால் உயிர் வேதம் நடைபெற்று விடுமோ என்று இப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் கூறுகின்றனர்.ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் வந்து பேசி இப்போதுதான் இடத்தை பார்த்துவிட்டு வருகிறோம் என்று சென்றுள்ளதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாணவ மாணவிகளோடு ஊர் பொதுமக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் திமுகவின் குஜிலியம்பாறை ஒன்றிய பெருந்தலைவர் சீனிவாசன் அலட்சியமாக எந்திரிச்சு வீட்டுக்கு செல்லுங்கள் என்று பேசி அவரது அலுவலகத்துக்கு சென்றது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது
விடியா ஆட்சியில் தொடரும் அவலங்களை கண்டு மக்கள் மிகவும் வேதனை அடைந்து வருகின்றனர்.

 

Tags :

Share via