நாளை குரூப் 1 முதல் நிலைத் தேர்வு –92 பணியிடங்களுக்கு 3.16 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

by Editor / 18-11-2022 08:02:15am
 நாளை  குரூப் 1 முதல் நிலைத் தேர்வு –92 பணியிடங்களுக்கு  3.16 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி குரூப் 1 முதல் நிலை தேர்வு குறித்து அறிவித்திருந்தது. அதில், 18 துணை கலெக்டர்கள், 26 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள், 25 வணிகவரி உதவி ஆணையர்கள், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர்கள், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் பதவிகள் என 92 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்திருந்தது.

இந்த பதவிகளுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்தவகையில் முதல்நிலைத் தேர்வு கடந்த மாதம் (அக்டோபர்) 30-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அது தள்ளிவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது.


இந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்ட முதல்நிலைத் தேர்வு நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

 

Tags :

Share via