நாகை மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் அத்துமீறல்.

நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் சென்ற மீனவர்கள் கோடியக்கரை தென் கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகு மீது மோதி, 2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள வலைகள், ஜி.பி.எஸ் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்றனர்.
இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மூலம் தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்தும், படகில் இருந்த எரிபொருளை பறித்துக்கொண்டு அத்துமீறலில் ஈடுபட்டதாக மீனவர்கள் வேதனை.
வலை உள்ளிட்ட மீன்பிடி தளவாட உடமைகளை இழந்த சண்முகம், ஜெயராமன், சக்திமயில், மணிமார் ஆகிய மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
Tags : நாகை மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் அத்துமீறல்.