வாலிபர் தற்கொலை

by Staff / 23-11-2022 05:51:10pm
வாலிபர் தற்கொலை

குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்ட தால் மனஉளைச்சலில் இருந்த வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். எரியோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.வேடசந்தூர் அருகே மாரம்பாடியை சேர்ந்தவர் சேசுராஜ். இவரது மகன் அருள்செபஸ்தியார்(23). இவர்கள் குடும்பத்துடன் தோட்டத்து வீட்டில் தங்கி விவசாய வேலை செய்து வருகின்றனர். குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்ட தால் மனஉளைச்சலில் இருந்த அருள்செபஸ்தியார் கிணற்றில் குதித்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் நிலைய அலுவலர் ஜேம்ஸ்அருள்பி ரகாஷ் தலைமையில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.5 மணிநேர போராட்டத்திற்கு பிறகு அருள்செபஸ்தியார் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து எரியோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via