சிறுமி பலாத்காரம் தையல்காரருக்கு 17 ஆண்டுகள் சிறை

by Staff / 24-11-2022 05:42:42pm
சிறுமி பலாத்காரம் தையல்காரருக்கு 17 ஆண்டுகள் சிறை

பள்ளிச் சீருடை தைக்க அளவு கொடுப்பதற்காக தையல் கடைக்கு வந்த சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தையல்கடைக்காரருக்கு, 17 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் திருச்சூர் அருகே குன்னம்குளம் விரைவு சிறப்பு போக்சோ நீதிமன்றம், தளிகுளம் காளிதாசநகரைச் சேர்ந்த ராஜன் என்பவரை குற்றவாளி என அறிவித்து உத்தரவிட்டது.

இந்த சம்பவம் 2015 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி நடந்தது. பள்ளி சீருடை தைப்பதற்காக அளவு கொடுக்க வீட்டுக்கு வந்த சிறுமியை தையல்கடைக்காரர் ராஜன் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமியே குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

வாதனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். விசாரணையின் போது 16 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 18 ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. அரசு தரப்பு வழக்கறிஞர். கே.எஸ். பெனாய் உடனிருந்தார்.

 

Tags :

Share via