ஜம்மு காஷ்மீரில் பல்வேறு இடங்களில் சோதனை

by Staff / 24-11-2022 05:38:24pm
ஜம்மு காஷ்மீரில் பல்வேறு இடங்களில் சோதனை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடகவியலாளர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து மிரட்டல் வந்ததை அடுத்து, பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். ஸ்ரீநகர், பத்காம் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டது.

பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுத்த வழக்கு தொடர்பாக ஸ்ரீநகர், பத்காம் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் பல இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக ஸ்ரீநகர் காவல்துறை ட்வீட் செய்துள்ளது. முன்னதாக இதே வழக்கில் போலீசார் சோதனை நடத்தினர். வியாழக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

பயங்கரவாத அமைப்புகள், 'காஷ்மீர் ஃபைட்' என்ற ஆன்லைன் பக்கம் மூலம் பத்திரிகையாளர்களின் பட்டியலை வெளியிட்டு, அவர்கள் புலனாய்வு அமைப்புகளின் அறிவுறுத்தல்களின்படி செயல்படுவதாக குற்றம் சாட்டினர். அச்சுறுத்தல் காரணமாக பல உள்ளூர் ஊடகவியலாளர்கள் வேலையை விட்டு விலகியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via