அரசியல் சாசனம் வெளிப்படையானது - பிரதமர் மோடி
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வெளிப்படையானது என்றும் முற்போக்கான கருத்துக்களைக் கொண்டது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இந்தியா விரைவான முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அடைவதை முழு உலகமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்று பிரதமர் கூறினார். அரசியலமைப்பு தின கொண்டாட்டத்தையொட்டி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசினார்."நாம் மக்கள்" என்பது மூன்று வார்த்தைகள் மட்டுமல்ல, நமது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் சாரத்தை வரையறுத்து, இந்தியாவை உலகின் அனைத்து ஜனநாயகங்களுக்கும் தாயாக மாற்றும் ஒன்று." - பிரதமர் கூறினார். நாட்டை வேகமாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு உறுதியளிக்க வேண்டிய நேரம் இது என்று நரேந்திர மோடி மேலும் கூறினார்.
Tags :