காவல்துறை - மாவோயிஸ்டு இடையே துப்பாக்கிச் சண்டை 6 மாவோயிஸ்டுகள் கொலை!

by Editor / 27-11-2022 08:21:17am
 காவல்துறை - மாவோயிஸ்டு இடையே  துப்பாக்கிச் சண்டை 6 மாவோயிஸ்டுகள் கொலை!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டம், பொம்ரா-ஹல்லூர் வனப் பகுதியில் 40 மாவோயிஸ்டுகள் திரண்டிருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, காவல்துறையினருக்கும் - மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பெண்கள் உள்பட 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அதில் நான்கு பேரில் உடல்களை ராணுவ வீரர்கள் மீட்டதாகவும், இரண்டு பேரின் உடல்களை மாவோயிஸ்டுகள் எடுத்துச் சென்றதாகவும் காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via