ஜிபி முத்து, ரெளடிபேபி சூர்யா மீது புகார்

by Editor / 26-06-2021 08:42:08am
ஜிபி முத்து, ரெளடிபேபி சூர்யா மீது புகார்

 பப்ஜி மதன், இவர் சிறுவர் சிறுவர் சிறுமிகளிடம் பப்ஜி விளையாட்டை விளையாடும்போது ஆபாசமாக பேசியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவரை போலவே ஆபாசமாக பேசும் மேலும் சிலர் மீதும் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆபாசமாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வரும் டிக்டாக் புகழ் ஜிபி முத்து, ரவுடி பேபி சூர்யா உள்பட 4 பேர் மீது இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் எம்எம்கே முஹைதீன் என்பவர் புகார் அனுப்பியுள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:

சமீபகாலமாக வலைதளங்களில் ஆபாச வீடியோ பதிவுகள் அதிக அளவில் வலம் வருகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லூரிகள் திறக்காததால் மாணவர்கள் கல்வி கற்பதற்கு இணையத்தில் அதிக நேரம் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திய பேஸ்புக் , ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அப்பாவி மாணவர்களை வழிகெடுத்து அவர்களை ஆபாச வலைதளங்களுக்கு அடிமையாக்கி பணம் சம்பாதிக்கும் நோக்கில் சிலர் 1,ஜிபி முத்து, 2. திருச்சி சாதனா, 3. பேபி சூர்யா, 4.சிக்சர் என்ற சிக்கந்தர் மேலும் பலர் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர இந்த வீடியோக்களை லட்ச்சணக்கானோர் காண்கின்றனர். இவர்களின் உடல் பாவணைகளும் பேச்சுக்களும் தமிழ்நாட்டில் கலாச்சாரம் மற்றும் சமூக சீரழிவை ஏற்படுத்தும். குறிப்பாக இதை காணும் சிறுவர், சிறுமிகளின் மனதை பாதிப்படைய செய்யும் வகையில் ஆபாச பதிவுகள் உள்ளது. இளைய சமுதாயத்தை பாதிக்கும் இத்தகைய இணையதளங்களை கண்டறிந்து அவற்றை தடை செய்ய வேண்டும், மாணவர்கள் மத்தியில் விஷத்தை பரப்பும் கொடிய உள்ளம் கொண்ட ஆபாச பேர்வழிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இதுபோன்ற பதிவுகள் மேலும் தொடராமல் பாதுகாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.

 

Tags :

Share via