பள்ளி கழிவறையில் பிறந்த குழந்தை

by Staff / 29-11-2022 11:36:46am
பள்ளி கழிவறையில் பிறந்த குழந்தை

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பள்ளி கழிவறையில் சிறுமி ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். பின்னர் குழந்தையை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விட்டுச் சென்றுள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண் 21 வயது இளைஞனால் 11 மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்யப்பட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via