குற்றாலம் மெயினருவியில் வெள்ள பெருக்கு காரணமாக குளிக்க தடை

by Editor / 30-11-2022 08:42:01am
 குற்றாலம் மெயினருவியில்  வெள்ள பெருக்கு காரணமாக குளிக்க தடை

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில்  நேற்று மாலை திடீரென கன மழை பெய்தது இம்மழையின் காரணமாக தென்காசி மாவட்டத்தினுடைய பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது இதன் தொடர்ச்சியாக அருவிகளின் நகரம் என போற்றப்படும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி,பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டத் தொடங்கியது.இதன் தொடர்ச்சியாக குற்றாலம் மெயினருவியில் நேற்று இரவு முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் மெயினருவியில் நேற்று இரவு முதல் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை செய்தது.தென்காசி மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை  காரணமாக  குளிக்க தடை இன்று வரை தொடர்கிறது.

 

Tags :

Share via