ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு19 ஆயிரம் கனடியாக அதிகரித்தது.

by Editor / 15-09-2024 09:47:23am
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு19 ஆயிரம் கனடியாக அதிகரித்தது.

தமிழ்நாடு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக 14,000 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து, நேற்று பிற்பகல் வரை அதே நிலையில் நீடித்தது. இந்நிலையில் மழையின் காரணமாக நேற்று மாலை முதல் திடீரென நீர்வரத்து உயரத் தொடங்கியது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 17,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரபடி வினாடிக்கு 19 ஆயிரம் கனடியாக அதிகரித்துள்ளது.

காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவார் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

 

Tags : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு19 ஆயிரம் கனடியாக அதிகரித்தது.

Share via