ரூ.439 கோடி ஏய்ப்பு.. பாஜக எம்எல்ஏ மீது வழக்கு

by Staff / 08-01-2024 11:40:20am
ரூ.439 கோடி ஏய்ப்பு.. பாஜக எம்எல்ஏ மீது வழக்கு

கர்நாடகாவில் உள்ள கோகாக் தொகுதி எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிஹோலி மீது வங்கிக்கு ரூ.439 கோடி செலுத்தாமல் இருந்தது தொடர்பாக மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநில கூட்டுறவு அபெக்ஸ் வங்கி லிமிடெட் பொது மேலாளர் ராஜண்ணா புகார் ஒன்றை அளித்தார். ரமேஷ் ஜார்கிஹோலி ஒரு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தபோது ரூ.232.88 கோடி கடன் வாங்கி இதுவரை கட்டவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரமேஷ் ஜார்கிஹோலி மீதும் மற்றும் சிலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via