தாயின் மரணத்தால் 12 வயது சிறுமி தற்கொலை

by Staff / 30-11-2022 11:56:26am
தாயின் மரணத்தால் 12 வயது சிறுமி  தற்கொலை

தாயின் மரணத்தால் மனமுடைந்த 12 வயது சிறுமி செவ்வாய்க்கிழமை பஞ்சாபின் ஜிராக்பூரில் உள்ள சுக்னா காலனியில் உள்ள வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பீகாரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சிறுமியின் தந்தை ராஜு ரவிதாஸ் அப்போது வேலைக்குச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.மாலையில் வீடு திரும்பிய அவர், மகள் அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தததைக் கண்டு அலறியுள்ளார்.தாயார் சமீபத்தில் இறந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி மனமுடைந்து இருந்ததாக போலீசாரிடம் கூறினார்.  போலீசார் விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

 

Tags :

Share via