சிவசங்கர் பாபா மீண்டும் சிறையிலடைப்பு
சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே அவர் கடந்த சில நாட்களாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனால் அவரை மீண்டும் புழல் சிறையில் அடைப்பதற்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர் .இதையடுத்து சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வர். நீதிமன்ற அனுமதியையடுத்து சிவசங்கர் பாபா விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.முன்னதாக சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் இதன் அடிப்படையில் அவர் மீது மேலும் ஒரு போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags :