மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் திறப்பு
டெல்டா மாவட்ட பாசனத்துக்காக மேட்டூர் அணையை கடந்த ஜூன் 12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 892 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பை கடந்து, கல்லணையை வந்தடைந்தது.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், மேட்டூர் அணையில் 10,000 கனஅடியில் இருந்து 15,000 கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனப் பகுதிகளில் பாசன தேவை அதிகரித்துள்ளதால் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Tags :