பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

by Staff / 08-12-2022 03:48:18pm
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இன்று முதல் 10 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பான்மையான இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மாண்டஸ் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, இன்று மதியம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதேபோல், திருவள்ளுர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் புயல் எச்சரிக்கை காரணமாக நாளை மறுநாள் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற இருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, TRUST தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.புயல் எதிரொலியாக டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் விடுமுறை குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via