பெண்ணை கடத்த 100 அடியாட்களை அனுப்பிய நபர்
தெலங்கானாவில் நவீன் என்ற இளைஞர் ஒருதலையாக பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் என கேள்விப்பட்ட நவீன், அவரை கடத்த 100 அடியாட்களை பெண்ணின் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து அவர்கள் பெண்ணை தேடி அவரது வீட்டை அடித்து, நொறுக்கி சேதப்பட்டுத்தியுள்ளனர். இதையடுத்து அந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளிக்க, 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருதலையாக காதலித்த நவீன் தலைமறைவாகியுள்ளார்.
Tags :