15 ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாகவே மட்டும் வரி வசூல் - தமிழக அரசு.
வரும் 15 ஆம் தேதி முதல் ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகமே மட்டுமே செலுத்த முடியும்,கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, வீட்டுவரி, தொழில் கட்டணம், குடிநீர் கட்டணம், விளம்பர வரி உட்பட அனைத்து வரிகளுமே இனி ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த முடியும்.
வரியை இணையவழி செலுத்துவதற்கான பயிற்சி ஊராட்சி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது,15 ஆம் தேதி இத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்ட பின்னர் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பணம் வசூலிக்க கூடாது என உத்தரவு.அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை சுற்றறிக்கை
Tags :