குரூப் – 4 தேர்வு உடனே நடத்த திருமாவளவன் கோரிக்கை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கொரோனா காலத்திற்கு பின்னர் பெரும்பாலான இளைஞர்கள் போட்டித் தேர்வுகளை எழுத தயாராகி வருகின்றனர். அண்மையில் வெளிவந்துள்ள ஆண்டுத்திட்ட அறிக்கை இளைஞர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே குரூப்-4 தேர்வை 2023-க்குள் நடத்த வேண்டும் என வலியுறுத்தியதுடன் எஸ்.சி., எஸ்.டி.. மக்களுக்கான பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags :