ஓடும் ரயிலில் திருடிய இளைஞர்கள் கைது

by Staff / 21-12-2022 03:11:25pm
ஓடும் ரயிலில் திருடிய இளைஞர்கள் கைது

சென்னையில் இருந்து திருவனந்தபுறம் செல்லும் ரயிலில் நேற்று முன்தினம் சென்னையை சேர்ந்த மரியம்மா ஜான் என்ற மூதாட்டி பயணம் செய்து உள்ளார். ஈரோடு ரயில் நிலையம் அருகே ரயில் வந்து கொண்டு இருந்த போது மூதாட்டி மரியம்மா ஜானின் கைபையில் வைத்து இருந்த 7 பவுன் நகை மற்றும் 5000 ரோக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பையுடன் திருட்டு போகி உள்ளன. கைப்பை தொலைந்து போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி ஈரோடு ரயில்வே இருப்பு பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து விசாரணை நடத்தி காவல்துறையினர் ஓடும் ரயிலில் திருட்டில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த ராஜா , கருரை சேர்ந்த கணேஷ் குமார் ஆகிய இரு இளைஞர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 7 பவுன் நகையை ரயில்வே இருப்பு பாதை காவல்துறையினர் மீட்டனர். மேலும் இவர்கள் மீது திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via