இந்தியாவில் நுழைந்த ஓமிக்ரான் BF7 வேரியன்ட்
Omicron BF 7 தற்போது இந்தியாவையும் உலகின் பிற பகுதிகளையும் புயலாய் தாக்கி வருகிறது. BF 7 வைரஸ் சிலருக்கு ஆபத்தானதாக கூட மாறக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தடுப்பூசி போட்டாலும் இந்த வைரஸ் வேகமாக பரவுகிறது என தெரிய வந்துள்ளது. நாள்பட்ட நோய்கள், நுரையீரல், சுவாச நோய்கள், புற்றுநோய் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆபத்தான கொரோனா ஓமிக்ரான் BF7 வேரியன்ட் இந்தியாவில் நுழைந்துள்ளது. சமீபத்தில் குஜராத்தின் வதோதராவில் BF 7 வகையை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இதனால் அனைத்து விமான நிலையங்களிலும் மத்திய அரசு உஷார்படுத்தப்பட்டுள்ளது. BF7 மாறுபாடுதான் சீன கொரோனா தீவிர பரவலுக்கு காரணம். இது இந்திய அரசை உஷார் படுத்தியுள்ளது. BF 7 மாறுபாட்டின் 2 வழக்குகள் குஜராத்தில் இதுவரை பதிவாகியுள்ளதாகவும், ஒடிசாவில் ஒரு வழக்கும் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதிகாரிகள் மூவரையும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுடன் தனிமைப்படுத்தினர்.
Tags : இந்தியாவில் நுழைந்த ஓமிக்ரான் BF7 வேரியன்ட்