கார் விபத்தில் சிறுமி பரிதாப பலி

by Staff / 27-12-2022 02:57:57pm
கார் விபத்தில் சிறுமி பரிதாப பலி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி செட்டி தெருவை சேர்ந்த 7 பேர் கொண்ட குடும்பத்தினர் திருச்செந்தூர் செல்வதற்காக ஒரு காரில் நேற்று இரவில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். காரை சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பாரதி நகர் சேர்ந்த பாண்டி (53 ) என்பவர் ஓட்டி வந்தார். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே துரைசாமிபுரம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் இருந்த மணி என்பவரது மகள் கயல்விழி (14) என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு எட்டயபுரம் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரில் வந்த பிரபா என்பவர் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via