உடும்பு வேட்டையாடி சமைத்த சிறுவன் உட்பட 2 பேர் கைது.

by Staff / 31-12-2022 01:04:40pm
உடும்பு வேட்டையாடி சமைத்த சிறுவன் உட்பட 2 பேர் கைது.

பூதப்பாண்டி வனசரகத்திற்கு உட்பட்ட பணக்குடி சிவகாமிபுரம் பகுதியில் 3 பேர் உடும்பு வேட்டையாடி , சமைப்பதாக குமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜாவுக்கு தகவல் வந்தது. அவரின் உத்தரவின் படி மாவட்ட உதவி வன பாதுகாவலர் சிவகுமார் தலைமையில் பூதப்பாண்டி வன அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது 3 வாலிபர் கள் உடும்பை பிடித்து சமைத்துக் கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்த போது 2 பேர் பிடிபட்டனர். மற்றொருவர் தப்பிவிட்டார்.விசாரணையில் பிடிப்பட்ட , இருவரில் ஒருவர் சிறுவன் என்றும் மற்றொருவர் சுணில் என்பதும் தெரியவந்தது. அவர்களை வனத்துறையினர் கைது செய்தனர். தப்பி ஓடிய சிவகாமிபுரத்தை சேர்ந்த இசைக்குமார் என்பவரை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via