இந்தியாவில் 40 ஆயிரத்துக்கும் கீழ்  குறைந்த கொரோனா பாதிப்பு

by Editor / 29-06-2021 06:36:53pm
 இந்தியாவில் 40 ஆயிரத்துக்கும் கீழ்  குறைந்த கொரோனா பாதிப்பு

 


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,566 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் 2வது அலை இந்தியாவில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. தினசரி பாதிப்பு பல நாட்கள் 4 லட்சத்தை தாண்டியது. தற்போது ஊரடங்கு, பொதுமுடக்கம், கட்டுப்பாடுகளால் 2வது அலை தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 46,148 ஆக உயர்ந்திருந்தது. 102 நாட்களுக்கு பிறகு 40 ஆயிரத்துக்கு கீழ் தொற்று குறைந்தது.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 ஆயிரத்து 566 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
நாட்டில் இதுவரை 40 கோடியே 81 லட்சத்து 39 ஆயிரத்து 287 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை 3 கோடியே 3 லட்சத்து 16 ஆயிரத்து 897 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 907 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 97 ஆயிரத்து 637 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 56 ஆயிரத்து 994 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 93 லட்சத்து 66 ஆயிரத்து 601 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 5 லட்சத்து 52 ஆயிரத்து 659 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 32.90 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via