சாலையில் கிடந்த மது அருந்திய 3 பேர் கவலைக்கிடம்

by Staff / 09-01-2023 11:53:09am
சாலையில் கிடந்த மது அருந்திய 3 பேர் கவலைக்கிடம்

கேரளாவின் இடுக்கி மாவட்டம் அடிமாலியில் சாலையில் கிடந்த மதுபாட்டிலை எடுத்து மது அருந்திய 3 வாலிபர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அனில்குமார், குஞ்சுமோன், மனோஜ் ஆகியோர் கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். சாலையில் கிடந்த மதுவை குடித்ததாக இளைஞர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via