விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72ஆக உயர்வு
நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72-ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களில் 5 பேர் இந்தியர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இறந்த 5 இந்தியர்களில் 4 பேர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இறந்தவர்கள் விபத்துக்கு முன் விமான பயணத்தை முகநூலில் நேரலை செய்துள்ளனர். இதில் விமானம் விபத்தில் சிக்குவதும், தீப்பிடித்து எரிவதும் பதிவாகியுள்ளன. இதையடுத்து விபத்தில் இறந்த குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். நேற்று முழுவதும் மீட்பு பணி நடைபெற்ற நிலையில் இதுவரை 68 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
Tags :