கவர்னர் பதவி விலகக்கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்.

by Staff / 20-01-2023 03:24:52pm
கவர்னர் பதவி விலகக்கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்.

தமிழக கவர்னர் ஆர். என். ரவி பதவி விலக கோரி நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாநகர தலைவர் நவீன் குமார் தலைமை தாங்கினார். மாநகர மண்டல தலைவர்கள் சிவபிரபு , செல்வன் , தங்கராஜ் , கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் அனுஷா பிரைட் , மணிகண்டன் , வக்கீல் ராதா கிருஷ்ணன் , மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 

Tags :

Share via

More stories