இளம் பெண் தீக்குளிப்பு

by Staff / 20-01-2023 04:21:47pm
 இளம் பெண் தீக்குளிப்பு

சேலம் அம்மாப்பேட்டை வித்யா நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30). தொழிலாளி. இவருக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. லட்சுமியின் தாயார் இறந்ததை அடுத்து அவரது தந்தை 2-வது திருமணம் செய்து கொண்டு 2-வது மனைவியுடன் வசித்து வருகிறார். இதனால் லட்சுமியின் தங்கை தனியாக வசித்து வந்தார். இதையடுத்து லட்சுமி தனது தங்கை மகேஸ்வரியை (22) தனது கணவர் வீட்டுக்கு அழைத்து வந்தார். அங்கு தங்கியிருந்தார். சதீஷ்குமார் லட்சுமியின் தங்கை மகேஸ்வரியை விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளார். தங்கையை பிரிய மனம் இல்லாத லட்சுமிக்கும், கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் வீட்டில் இருந்த லட்சுமி திடீரென மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீயின் தாக்கத்தால் அலறி துடித்த லட்சுமியை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் லட்சுமி சிகிச்சை சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

 

Tags :

Share via