நகைக்கடை உரிமையாளரிடம் ரூ. 24½ லட்சம் மோசடி 

by Editor / 24-01-2023 08:31:11am
நகைக்கடை உரிமையாளரிடம் ரூ. 24½ லட்சம் மோசடி 

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் பகவதியப்பன் (வயது 53). இவர் மீனாட்சிபுரத்தில் சொந்தமாக நகைக்கடை வைத்துள்ளார்.இவரது கடையில் காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன் (41). தொழில் சம்பந்தமாக பழக்கமாகி நண்பர்கள் ஆகியுள்னர்.அவர் இவரிடம் தங்க நகைகளை வாங்கி, விற்பனை செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் திருமண நிகழ்ச்சிக்கு தேவைப்படுவதாக தங்கப்பன் 482 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை பகவதியப்பனிடம் வாங்கி சென்றுள்ளார்.இதற்கு மாறாக உடனே ரூ. 24½ லட்சம் தருவதாக கூறினார். பின்னர் தங்கப்பனை தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் தங்கப்பன் பகவதியப்பனிடம் நகை மோசடி செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து  பகவதியப்பன் கோட்டார் போலீசில் புகார் அளித்தார்.அந்தப்புகாரில் நகையை மீட்டு தந்து தங்கப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என அதில் கூறியிருந்தார். புகாரின்அடிப்படையில்  கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கப்பனை தேடி வந்தனர். இந்த நிலையில் தங்கப்பன் அதேபகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து  போலீசார் அவனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
 

 

Tags :

Share via