துறைமுகத்தில் 10 டன் நிலக்கரியை கடத்த முயற்சி

by Staff / 28-01-2023 02:18:58pm
துறைமுகத்தில் 10 டன் நிலக்கரியை கடத்த முயற்சி

தூத்துக்குடி துறைமுகத்தில் 10 டன் நிலக்கரியை கடத்த முயன்றதாக லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலக்கரி தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 7-வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகன் விஜய் ஆனந்த் (வயது 45). இவர் தெர்மல்நகரில் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் ஒரு கப்பலில் இருந்து இறக்குமதி செய்த நிலக்கரியை மற்றொரு கப்பல் மூலம் மற்றொரு நாட்டுக்கு அனுப்புவதற்கான பணியையும் மேற்கொண்டு வந்தார். அதன்படி ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை லாரி மூலம் எடுத்து சென்று துறைமுகத்தில் உள்ள மற்றொரு கப்பல் மூலம் எகிப்துக்கு அனுப்பும் பணியை மேற்கொண்டு இருந்தார். 10 டன் அப்போது ஒரு லாரியில் 10 டன் நிலக்கரியை ஏற்றி உள்ளனர். அந்த லாரியை முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவை சேர்ந்த பிச்சையா மகன் கார்த்திக்குமார் (26) என்பவர் ஓட்டி வந்தாராம். அவர் நிலக்கரி ஏற்றிய லாரியை கப்பல் அருகே கொண்டு செல்லாமல் துறைமுகத்தில் இருந்து வெளியில் கடத்திச்செல்ல முயன்றாராம். அப்போது துறைமுக நுழைவு வாயிலில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் லாரியை மடக்கி பிடித்து சுங்கத்துறையில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக விஜய் ஆனந்த் அளித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via