பான்பராக் மற்றும் குட்கா கடத்திய 2  பேர் கைது.ரூ. 5லட்சம்  பான்பராக் குட்கா பறிமுதல்..

by Editor / 05-08-2023 07:40:00am
 பான்பராக் மற்றும் குட்கா கடத்திய 2  பேர் கைது.ரூ. 5லட்சம்  பான்பராக் குட்கா பறிமுதல்..

கர்நாடக மாநிலத்தில் இருந்து சேலம் வழியே பல்வேறு மாவட்டங்களுக்கு பான்பரக் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக சேலம் மாநகர போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சேலம் மாநகரப்பகுதியில் தனிப்படைகள்  அமைக்கப்பட்டு இரவு நேரத்தில் கூடுதலாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் நேற்று மாலை பெங்களூரில் இருந்து கார் மூலம் பான்பராக் கடத்தி வரப்படுவதாக சேலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சேலம் அருகே உள்ள கருப்பூர் பகுதியில் இருக்கும் சுங்கச்சாவடி பகுதியில் சேலம் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்ட நிலையில் 
வேகமாக வந்த காரை நிறுத்தி விசாரித்த போது  சேலம் மாவட்ட வாழப்பாடிக்கு செல்வதாக தெரிவித்தனர்,.

போலீசார் காரை முழுவதும் சோதனை செய்து அப்போது காரில் சுமார் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ளான பான்பராத் மற்றும் குட்கா இருந்ததுகண்டறியப்பட்டது. உடனே காரை தனிப்படை போலீசார் பறிமுத்து  செய்து சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையம் எடுத்து வந்து விசாரணை செய்தனர் .

காரில் இருந்த பான் பராக் மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது,
 பான்பராக்கை கடத்தி வந்ததாக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் ( வயது 25) மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சரவணன் (குமார் 26) கைது செய்யப்பட்டனர்,கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு  கார் பர்முதல் செய்யப்பட்டது,

 

Tags :

Share via