ஈவிகேஎஸ் இளங்கோவன், வரும் 3ம் தேதி வேட்புமனுவை தாக்கல்..?

by Editor / 29-01-2023 10:27:04am
ஈவிகேஎஸ் இளங்கோவன், வரும் 3ம் தேதி வேட்புமனுவை தாக்கல்..?

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக களம்காண்கிறார்.

மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தியது. நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை மறுநாள் ஈரோட்டில் பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அமமுக சார்பில் சிவ பிரசாத் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மநீம கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் என தெரிவித்துள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன், வரும் 3ம் தேதி அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் அதிகாரி சிவக்குமாரிடம் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். அப்போது கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

 

Tags :

Share via