ஸ்ரீநகரில் ராகுல்காந்தியுடன் தமிழ்நாடு எம்பிக்கள் சந்திப்பு
காஷ்மீரின் ஸ்ரீநகரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நடத்தும், இந்திய ஒற்றுமை யாத்திரையின் நிறைவு நாளையொட்டி, நேற்று இரவு, காங்கிரஸ் சார்பில் இரவு உணவு விருந்து அளிக்கப்பட்டது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, திமுக எம்பி திருச்சி சிவா, விசிக எம்பி திருமாவளவன், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர், ராகுலுடன் அரசியல் நிலவரம், பயண அனுபவம் குறித்து கலந்துரையாடினர்.
Tags :