ஷவர்மா சிக்கனை தின்ற நாய்.
தூத்துக்குடியில் சமுத்ரா என்ற பிரபல உணவகத்தில் ஷவர்மா சிக்கனை நாய் சாப்பிடும் வீடியோ வெளியானதை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகத்துக்கு சீல் வைத்தனர். சுகாதாரமற்ற முறையில் கடைக்கு வெளியே, ஷவர்மா தயார் செய்வதற்காக சிக்கனை வேக வைத்துள்ளனர். அப்போது அங்கு ஊழியர்கள் யாரும் இல்லாமல் கவன குறைவாக ஹோட்டல் நிர்வாகம் செயல்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வழியாகச் சென்ற தெருநாய் ஆசை ஆசையாக சிக்கனை ருசித்து சாப்பிட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. உணவு டோர் டெலிவரிக்காக பிரபல நிறுவனங்களுடன் இந்த உணவகம் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :