ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து.

by Editor / 12-02-2023 01:28:20pm
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு  தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்  வாழ்த்து.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் டூவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது. ”ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜகவின் மூத்த தலைவரும்,நான் பெரிதும் போற்றும் அண்ணன்,சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டேன் . “பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அன்பிற்குரிய அண்ணன் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த மன மகிழ்ச்சி அளிக்கிறது. அவரின் தேச நலப் பணிகள் மென்மேலும் சிறக்க மனமார வாழ்த்துகிறேன்” என்று தனது டூவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via