காரை வைத்து அச்சுறுத்திய ஆசாமிகள்

by Staff / 28-02-2023 11:57:08am
காரை வைத்து அச்சுறுத்திய ஆசாமிகள்

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் சில ஆசாமிகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் காரில் ஆபத்தான பயணம் மேற்கொண்டனர். சில இளைஞர்கள் தார் ஜீப் வாகனத்தின் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டனர். போக்குவரத்து விதிகளை மீறியதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. ஜீப்பில் அதிக ஒலியுடன் பாடல் போட்டுக்கொண்டு நடனமாடிய படியே வாகனத்தை குலுங்க வைத்து அச்சுறுத்தினர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிலரை கைது செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

 

Tags :

Share via