துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த ஒருவர் கைது இருவர் தப்பி ஓட்டம்.

by Staff / 04-03-2023 04:16:35pm
துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த ஒருவர் கைது இருவர் தப்பி ஓட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பனங்காட்டேரி மலைப்பகுதியில் ஆம்பூர் வனச்சரக அலுவலர் சங்கரய்யா தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டடனர் அப்போது வனவிலங்குகளை வேட்டையாட அனுமதியின்றி நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரித்ததில் அந்த நபர் நாயக்கநேரி பகுதியைச் சேர்ந்த ஜெயபால் மகன் ஏழுமலை (28) என தெரியவந்தது மேலும் அவருடன் இருந்த மனோகர் , குமார் ஆகிய இருவரும் வனத்துறையினர் வருவதைக் கண்டு தப்பியோடியுள்ளனர் பின்னர் ஏழுமலையை கைது செய்து அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்யபப்ட்டு வழக்கு பதிவு செய்து ஏழுமலையை சிறையில் அடைத்தனர் மேலும் தப்பி ஓடிய மனோகர் குமார் ஆகிய இருவரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via