சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 34 நபர்கள் கைது.

by Editor / 05-03-2023 01:30:13pm
சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 34 நபர்கள் கைது.

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சரவணன் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.இதனைத்தொடர்ந்து 25.02.2023 -ம் தேதி முதல் 04.03.2023 -ம் தேதி வரை  சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 34 நபர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 286 பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via