பெயின்டிங் பணிக்காக வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

by Staff / 09-03-2023 05:44:58pm
பெயின்டிங் பணிக்காக வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

 ஈரோடு மாவட்டம், பவானி சாகர் பகுதியை சேர்ந்தவர் 45 வயதான மயில்சாமி, இவர் கடந்த 10 ஆண்டுகளாக சிவநேசன் என்பவரிடம் பெயின்டராக பணியாற்றி வருகிறார், இவர் இலங்கை அகதி என கூறப்படுகின்றது, இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை சிங்காநல்லூர் அடுத்த வேலன் நகரில், பெயின்டிங் பணியில் ஈடுபட்டு, அதற்காக அங்கு தங்கி இருந்துள்ளார், இந்ந நிலையில் நேற்று முன்தினம், இரவு உணவு முடித்துவிட்டு, அங்கு தங்கினார், மீண்டும் நேற்று, காலையில் அவருடன் பணிபுரியும் வினோத்குமார், என்பவர், மயில்சாமி, கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு, , உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார், அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவரை, பரிசோதனை செய்து அவர், இறந்துவிட்டதாக தெரிவித்தனர், இதனை தொடர்ந்து இது குறித்து இவரது மனைவி செல்வி சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via