ரயில் நிலையத்தில் டிரம்மில் பெண்ணின் சடலம்
கர்நாடகாவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் டிரம்மில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. இச்சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ரயில் நிலைய வளாகத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இந்த டிரம்பை வைத்துச் சென்றதாக தெரிவித்தனர். பெங்களூருவில் கடந்த மூன்று மாதங்களில் ரயில் நிலையங்களில் இதுபோன்று பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
Tags :