திருநங்கைகளுக்கான குறைதீர்ப்பு முகாம்

by Editor / 08-07-2021 01:02:37pm
திருநங்கைகளுக்கான குறைதீர்ப்பு முகாம்

பொள்ளாச்சி சார் ஆட்சியர் தலைமையில் திருநங்கைகளுக்கான குறைதீர்ப்பு முகாம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் புதிதாக பதவியேற்ற ஆட்சியாளர் தாக்ரே அவர்களின் தலைமையில் திருநங்கைகளுக்கான குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதுவரை கோவையில் மட்டுமே நடைபெற்று வந்த திருநங்கைகளுக்கான குறைதீர்ப்பு முகாம் இந்த முறை புதிதாக பொள்ளாச்சியில் நடைபெற்றது .இந்த முகாமில் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சார் ஆட்சியாளர் அவர்கள் உரையாற்றும் பொழுது அரசாங்கம் உங்களுக்கு பலவிதமான உதவிகளை நலத்திட்டங்களை செய்துள்ளது உங்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அந்த குறைபாடுகளை நீங்கள் தெரிவிக்கலாம்  மேலும் இலவச வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு கோரிக்கை மனு அளித்தால் அவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா ஒதுக்கீடு செய்யப்படும் , குடும்ப குடும்ப அட்டை இல்லாதவர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கும் குடும்ப அட்டைகள் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். படித்த திருநங்கைகள், திருநங்கைகளில் வேறு ஏதேனும் தொழில் செய்ய விரும்பினால் அவர்களுக்கு வங்கி கடனுதவி பெற்றுத்தர பரிசீலனை செய்யப்படும் 

 

Tags :

Share via