பாஜக நிர்வாகி வீட்டில் அமலகத்துறையினர் 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை

by Staff / 23-03-2023 05:31:07pm
பாஜக நிர்வாகி வீட்டில் அமலகத்துறையினர் 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 6வது தெருவைச் சேர்;ந்தவர் சிவந்தி நாராயணன். கட்டிட தொழில் செய்து வருகிறார். மேலும் பல ஆண்டுகளாக பா. ஜ. கவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் தற்பொழுது பா. ஜ. க. பட்டியல் பிரிவு அணி மாநில பொதுச்செயலாளராக உள்ளார். இந்நிலையில் இன்று காலை மதுரையில் இருந்து 3 அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சிவந்தி நாராயணன் வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். அவரது மனைவி கவுசல்யாவிடம் விசாரணை நடந்தது. பாஜக நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத்துறையினர் ஆய்வு மேற்கொண்டது தொடர்;ந்து பாஜக நிர்வாகிகள் அவர் வீட்டில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையெடுத்து அதிகாரிகள் ஒரு விசாரணை நடைபெறுகிறது. வேறு எதுவும் இல்லை என்று தெரிவிக்கவும். இதையெடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். சிவந்தி நாராயணன் வெளியூரில் இருந்ததால் சுமார் 3 மணி நேரம் அவரது மனைவி கவுசல்யாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. தற்பொழுது சிவந்தி நாராயணன் வீட்டிற்கு வந்ததை தொடர்ந்து அமலாகத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஏ. கே. எஸ் சாலையில் உள்ள சிவந்தி நாராயணன் அலுவலகத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.பிரதமர் மோடியின் திட்டத்தின்படி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் 1500 வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும், இந்த ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனப் பணிகளை சிவந்தி நாராயணன் மேற்பார்வையாளராக இருந்து வருவதாகவும், இந்நிலையில் பணம் பரிமாற்றம் தொடர்பாக ஒரு வழக்கில், சிவந்தி நாராயணனுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து இந்த சோதனை நடைபெற்றது.

 

Tags :

Share via