ரூ.8 கோடி வரதட்சணை கொடுத்த விவசாயிகள்

by Staff / 27-03-2023 03:03:59pm
ரூ.8 கோடி வரதட்சணை கொடுத்த விவசாயிகள்

ராஜஸ்தானில் இரண்டு விவசாய சகோதரர்கள் தங்கள் சகோதரியின் திருமணத்திற்கு வரதட்சணையாக ரூ.8.1 கோடி மதிப்பிலான சொத்தை காதல் காரணமாக கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. நாகூர் மாவட்டத்தில் உள்ள திங் சாரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சகோதரர்கள் அர்ஜுன் மற்றும் பகீரத் மெஹாரியா ஆகியோர் தங்களுடைய சகோதரியின் திருமணத்திற்காக ரூ.8.1 கோடி வரதட்சணையாக வழங்கினர். இதில் ரூ.2.31 கோடி ரொக்கம், 1 கிலோ தங்கம், 14 கிலோ வெள்ளி, நிலம் மற்றும் பல வாகனங்கள் அடங்கும்.

 

Tags :

Share via