சுவர் இடிந்து இருவர் பலி
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் கோர விபத்து சம்பவம் நடந்துள்ளது. ராம்பூர் கர்கானா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாபனோலி கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் சுவர் ஒன்று சனிக்கிழமை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் செங்கற்கள் மேலே விழுந்ததில் 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பெண் தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
Tags :