வன விலங்குகளை வேட்டை நாய்கள் வைத்து வேட்டையாட சென்ற 5 பேர் கைது.

by Editor / 28-08-2023 10:56:30pm
வன விலங்குகளை வேட்டை நாய்கள் வைத்து வேட்டையாட சென்ற 5 பேர் கைது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட  சின்னக்காடு   பீட்டிற்குட்பட்ட மங்களாபுரம் பரம்பு பகுதியில் வன விலங்குகளை நாய்கள் வைத்து வேட்டையாட சென்ற ஐந்து பேர் கைது வனத்துறை அதிகாரிகள் அதிரடி 1 .25  லட்சம் ரூபாய் அபதாரம்
  நாய்களை வைத்து வன விலங்குகளை வேட்டையாடுவதாக   மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு  ஃபோன் மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து  மாவட்ட வன அலுவலர் முருகன்  உத்தரவின்பேரில் ரேஞ்சர் சுரேஷ்  தலைமையில் கடையநல்லூர் பிரிவு வானவர் முருகேசன்,  மேக்கரை பிரிவு வனவர்  , அம்பலவாணன்,  சிறப்பு பிரிவு வானவர் ரவீந்திரன் வனக்காப்பாளர்கள் ராமச்சந்திரன், ராஜா, அய்யாதுரை, மகாதேவன், வேட்டு தடுப்பு காவலர்கள் சுப்புராஜ், கணேசன் ஆகியோர்   காசிதர்மம் மற்றும் மங்களாபுரம் பறம்பு  பகுதியில் மாலை நேரத்தில் ரோந்து பணியில் செல்லும்போது   சின்னக்காடு பீட் எல்லைக்கு உட்பட்ட மங்களாபுரம் பறம்பு பகுதியில் காசிதர்மத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் லட்சுமண குமார் வயது 31, சுப்பையா மகன் பழனிச்சாமி வயது 40, அர்ச்சுனன் மகன் மாடசாமி வயது 62, மூக்கன் மகன் செல்லத்துரை வயது 55, வைரவன் மகன் திருமலை குமார் வயது 42 ஆகியோ வேட்டை நாய்களுடன் சுற்றி திரிந்த நபர்களை கைது செய்து  
  ஆகியோர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 (9)ன் கீழ் வழக்குப்பதிந்து    புலன் விசாரணை செய்ததில் குற்றம் உறுதி  செய்யப்பட்டது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து வன உயிரினங்களை வேட்டையாடும் என்ற குற்றத்திற்காக மாவட்ட வன அலுவலர் டாக்டர் முருகனின் உத்தரவின்படி ஒவ்வொருவருக்கும் தலா 25,000 வீதம் மொத்தம் 1,25,000 ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டு  அனைவரையும் வன ரேஞ்சர் சுரேஷ்எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்  
 தொடர்ந்து வன உயிர்களை வேட்டையாடும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் தொடர்ந்து அவர்கள் குற்றச்செயலலி ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ரேஞ்சர் சுரேஷ் தெரிவித்தார்
 

 

Tags :

Share via