அசுத்தமான தண்ணீரை குடித்த மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு

by Staff / 10-02-2023 03:30:39pm
அசுத்தமான தண்ணீரை குடித்த மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு

உத்தரப்பிரதேசத்தின் மெயின்புரி மாவட்டத்தில் அசுத்தமான தண்ணீரை குடித்ததால் மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். அரசு பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவ, மாணவிகள் குளிரூட்டி தண்ணீரை குடித்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 21 மாணவர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் வியாழக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஏழு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். மீதமுள்ளவர்கள் முதல்கட்ட சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via